search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்து சவான்"

    சர்ஜிகல் ஸ்ட்ரைக் ஆபரேஷனின் போது எல்லை தாண்டி பாகிஸ்தானிடம் சிக்கிக்கொண்டு பின்னர் நாடு திரும்பிய ராணுவ வீரர், தன்னை ராணுவத்தில் இருந்து விடுவிக்க கோரி கடிதம் எழுதியுள்ளார்.
    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த இந்திய ராணுவம் அங்கு பயங்கரவாதிகளின் முகாமை அழித்தது. அப்போது, ராணுவ சிப்பாய் சந்து சவான் என்பவர் அங்கு மாயமானர்.

    பாகிஸ்தான் படையினரிடம் சந்து சவான் சிக்கிக் கொண்டதாக பின்னர் தெரியவந்தது. பின்னர், இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர், நான்கு மாதங்கள் கழித்து அவரை பாகிஸ்தான் விடுவித்தது. இந்தியா திரும்பிய பின்னர் அவர் மீது ராணுவ ரீதியிலான விசாரணை நடந்தது.

    உயரதிகாரிகளின் அனுமதி இல்லாமல் ஆயுதங்களுடன் முகாமை விட்டு எல்லை தாண்டி சென்றதாக சந்து மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதற்காக, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள ராணுவ பள்ளிக்கு மாற்றப்பட்டார்.


    மூன்று வாரங்களுக்கு முன்னதாக சந்து ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முறையற்று நடந்து கொள்வதால் சந்து சிறிது நாட்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என மருத்துமனையில் சேர்க்கப்பட்டதாக ராணுவம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், “ 20 நாட்களாக இந்த மருத்துவமனையில் இருக்கிறேன். அந்த சம்பவத்திற்கு பிறகு (பாகிஸ்தானிடம் பிடிபட்ட நிகழ்வு) என்னை நடத்தும் விதம் மன ரீதியான அழுத்தத்தை கொடுக்கிறது. எனவே, ராணுவத்தில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும். சாதாரண வாழ்க்கையை வாழ விரும்புகிறேன்” என சந்து சவான் ராணுவ உயரதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
    ×